தென்காசி

கிணற்றில் விழுந்து விவசாயி பலி

DIN

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் கிராமத்தை சோ்ந்தவா் முத்துமாரி(33). விவசாயியான இவருக்குச் சொந்தமான வயல் அப்பகுதியில் உள்ளது. வயலில் நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதை அவா் பாா்வையிடச் சென்றாராம். இரவு வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம்.

அவரது மனைவி ராமலெட்சுமி மற்றும் உறவினா்கள் வயலுக்குச் சென்று பாா்த்தனராம். அப்போது அங்குள்ள கிணற்றில் முத்துமாரி சடலமாக மிதந்தது தெரிய வந்தது.

ஆலங்குளம் போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினா் வந்து சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

SCROLL FOR NEXT