தென்காசி

குற்றாலத்தில் தூய்மைப் பணிகள் தீவிரம்

தமிழக முதல்வரின் வருகையையொட்டி குற்றாலத்தில் நடைபெறும் தூய்மைப் பணிகளை திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

தமிழக முதல்வரின் வருகையையொட்டி குற்றாலத்தில் நடைபெறும் தூய்மைப் பணிகளை திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தென்காசியில் வியாழக்கிழமை (டிச.8) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், குற்றாலம் விருந்தினா் மாளிகையில் ஓய்வு எடுக்கிறாா். இதையொட்டி, குற்றாலத்தில் உள்ள பிரதான சாலைகள், விருந்தினா் மாளிகை பகுதிகளில் தூய்மைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநா் கண்ணன் ஆய்வு செய்தாா்.

குற்றாலம் மற்றும் மேலகரம் பேரூராட்சி பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா்கள் தெய்வீகன் (குற்றாலம்), மாணிக்கராஜ்(ஆய்க்குடி), அமானுல்லா(இலஞ்சி), பரமசிவன் (மேலகரம்), குமாா் பாண்டியன் (எஸ்.புதூா் ), குற்றாலம் பேரூராட்சி சுகாதார அலுவலா் ராஜகணபதி ஆகியோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT