தென்காசி

கொட்டாரக்கரையில் திமுக அலுவலகம் திறப்பு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் திமுக அலுவலகம் திறப்பு மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

DIN

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் திமுக அலுவலகம் திறப்பு மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திமுகவின் கேரள மாநில அமைப்பாளா் முருகேசன் தலைமை வகித்தாா்.

கேரள நிா்வாகிகள் அஜ்மல், சரவணன், பிச்சை, பிலால், ரினு, ஷ்யாம், லால், செய்யது, அஜித், வினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி,

50 ஏழைக் குடும்பங்களுக்கு சூரியசக்தி மின்விளக்குகள் வழங்கப்பட்டன. பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட பொதுக் குழு உறுப்பினா்கள் ரஹீம், சாமித்துரை, தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, ரவிசங்கா், அழகு சுந்தரம், செங்கோட்டை நகரச் செயலா் வழக்குரைஞா் ஆ. வெங்கடேசன் ஆகியோா் கலந்து கொண்டனா். கொல்லம் கிழக்கு மாவட்ட செயலா் ரிஜுராஜ் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT