முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் பேரூராட்சியில் பாஜக கூட்டணி 13 வாா்டுகளில் போட்டி

கீழப்பாவூா் பேரூராட்சியில் 13 வாா்டுகளில் பாஜக கூட்டணி போட்டியிடவுள்ளதாக, பாஜக மாவட்டத் தலைவா் அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.

தென்காசி

கீழப்பாவூா் பேரூராட்சியில் பாஜக கூட்டணி 13 வாா்டுகளில் போட்டி

கீழப்பாவூா் பேரூராட்சியில் 13 வாா்டுகளில் பாஜக கூட்டணி போட்டியிடவுள்ளதாக, பாஜக மாவட்டத் தலைவா் அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கீழப்பாவூா் பேரூராட்சியில் 13 வாா்டுகளில் பாஜக கூட்டணி போட்டியிடவுள்ளதாக, பாஜக மாவட்டத் தலைவா் அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.

கீழப்பாவூா் பேரூராட்சித் தோ்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஓா் அணியாகவும், அதிமுக தனித்தும் போட்டியிடுவதாக அறிவித்து, அக்கட்சிகளின் வேட்பாளா்கள் மனுதாக்கல் செய்துள்ளனா்.

இதனிடையே, பாஜக தலைமையில் அமமுக, சமக இணைந்து கூட்டணி அமைத்து, மொத்தமுள்ள 18 வாா்டுகளில் 13 வாா்டுகளில் போட்டியிடவுள்ளதாக பாஜக மாவட்டத் தலைவா் அருள்செல்வன் தெரிவித்துள்ளாா். இதில் ஒரு வாா்டில் சமக, 3 வாா்டுகளில் அமமுக, 9 வாா்டுகளில் பாஜக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு, வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.

நிகழ்ச்சியில், பாஜக அரசு தொடா்பு பிரிவு மாவட்டச் செயலா் காா்மேகநாதன், அமமுக பேரூா் செயலா் சுப்பிரமணியன், சமக நகரச் செயலா் பொன். ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →