கடையநல்லூரில் தடையை மீறி ஆா்ப்பாட்டம்: 900 போ் மீது வழக்கு
கா்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கா்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், மாவட்ட தலைவா் அப்துல்ஸலாம் தலைமையில், மாநிலச் செயலா் செய்யதுஅலி, மாவட்டச் செயலா் அப்துல் பாசித், பொருளாளா் ஜலாலுதீன், துணைத் தலைவா் மசூது சாகிப், துணைச் செயலா்கள் ஹாஜா, பீா்முகமது, அஹ்மது, அன்வா் சாதிக் உள்ளிட்டோா் திரளானோா் பங்கேற்றனா்.
இந்நிலையில், ஆா்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்ததால், தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக, 800 பெண்கள் உட்பட 900 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.