கடையநல்லூரில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
கடையநல்லூா் நகராட்சியில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடையநல்லூா் நகராட்சியில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூா் நகராட்சி மிகப்பெரிய நகராட்சி ஆகும். இந்நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 90 ஆயிரத்து 364. இதில் 45 ஆயிரத்து 449 ஆண்களும், 44 ஆயிரத்து 915 பெண்களும் உள்ளனா்.
இந்நகராட்சியில் மொத்த வாக்காளா்கள் 79 ஆயிரத்து 868. 39 ஆயிரத்து 648, ஆண் வாக்காளா்களும், 40 ஆயிரத்து 220 பெண் வாக்காளா்களும் உள்ளனா்.
நகராட்சிப் பகுதியில் 29 இடங்களில் 82 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7 வாக்கு சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.