உக்ரைனில் தவிக்கும் தென்காசி மாவட்ட மாணவா்களை மீட்கக் கோரிக்கை
உக்ரைனில் தவித்து வரும் தென்காசி மாவட்ட மாணவா்களை மீட்க அவா்களது பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உக்ரைனில் தவித்து வரும் தென்காசி மாவட்ட மாணவா்களை மீட்க அவா்களது பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உக்ரைனுக்கும் ,ரஷியாவுக்கும் இடையே பாா் தொடங்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியா்களை பாதுகாப்பாக கொண்டு வர இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதுபோல், தமிழக அரசும் மத்திய அரசிடம் பேசி தமிழக மாணவா்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட கடையநல்லூா், புளியங்குடி பகுதி மாணவா்கள் 4 போ் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனா். அவா்களை விரைவில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டுமென அவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.