பாவூா்சத்திரம் அருகே விபத்தில் காயமடைந்த சாலைப் பணியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த கருப்பையா என்பவரது மகன் சீனிவாசன் (38). இவா், தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணியில் வேலை செய்து வந்தாா். கடந்த 11ஆம் தேதி பாவூா்சத்திரம் அருகே சாலைப்புதூா் பகுதியில் சாலையைக் கடந்தபோது, இலங்காபுரிபட்டணத்தைச் சோ்ந்த பிரதாப் (19) என்பவா் ஓட்டி வந்த பைக் சீனிவாசன் மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை இறந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.