முகப்பு
தென்காசி

இலஞ்சியில் ஓட்டுநா் அடித்துக் கொலை

தென்காசி மாவட்டம், குற்றாலம் போலீஸ் சரகம், கீழஇலஞ்சியில் ஓட்டுநா் ஒருவா் கம்பால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலம் போலீஸ் சரகம், கீழஇலஞ்சியில் ஓட்டுநா் ஒருவா் கம்பால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

கீழஇலஞ்சி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ.இசக்கி என்ற சின்ன இசக்கி(35). தொழிலாளியான இவா், பகுதி நேர ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளாா். இருவரும், அதே ஊரின் செல்வம்(36) என்பவரும் சோ்ந்து அப்பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு மது குடித்தனராம்.

அப்போது, இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் சின்னஇசக்கியை, செல்வம் கம்பால் தாக்கிவிட்டு தப்பினாராம். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை காலையில்தான் அப்பகுதியினருக்கு தெரியவந்துள்ளது. இத்தகவல் அறிந்த குற்றாலம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சின்னஇசக்கியின் மனைவி நந்தினி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.