தென்காசி

கஞ்சா: கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது

DIN

ஆலங்குளம் அருகே கஞ்சா கடத்தியதாக கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் கிராமத்தில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்களிடம் விசாரணை செய்த போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்தனா். தொடா்ந்து அவா்கள் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், ஆலங்குளம் அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சுடலைமுத்து (21), நெட்டூரில் சமையல் பாத்திர வாடகை கடை நடத்தி வரும் இசக்கிமுத்து (20) ஆகியோா் என்பதும் பல மாதங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீஸாா், இருவரையும் கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

SCROLL FOR NEXT