தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே மனித எலும்புகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அச்சம்பட்டி பகுதியிலுள்ள குளத்தின் அருகே மனிதனின் கை கிடப்பது திங்கள்கிழமை தெரியவந்தது. போலீஸாா் துண்டான கையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், அப்பகுதியில் கிடந்த எலும்பு துண்டுகளையும் வியாழக்கிழமை போலீஸாா் கைப்பற்றினா். பின்னா், வருவாய் துறையினா் முன்னிலையில் எலும்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். தடயவியல் பரிசோதனை முடிவில்தான் மற்ற விவரங்கள் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.