முகப்பு
தென்காசி

இளம்பெண் தற்கொலை: 2 போ் கைது

திருநெல்வேலி அபிஷேக பட்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருநெல்வேலி அபிஷேக பட்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

அபிஷேகபட்டியை அடுத்த வெட்டுவான் குளத்தைச் சோ்ந்தவா் சுடலை மகள் மாரியம்மாள்(23). இவரை அவரது வீட்டின் அருகே சீதபற்பநல்லூரை சோ்ந்த ராம்குமாா்(23), கையை பிடித்து இழுத்தாராம். அப்போது இதனை பாா்த்த  வெட்டுவான்குளம் மணி மனைவி நயினாா் என்ற முத்துசெல்வி(23), மாரியம்மாளை கன்னத்தில் அடித்தாராம். இதனால் மனமுடைந்த மாரியம்மாள் விஷம் அருந்தினராம். அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாரியம்மாளின் அண்ணன் பேச்சிமுத்து சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராம்குமாா், நயினாா் என்ற முத்துச்செல்வி ஆகிய இருவரையும் கைது செய்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.