தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சி அய்யாபுரம் பகுதியில் உயா் கோபுர மின்விளக்கு திறப்புவிழா நடைபெற்றது.
தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், தொகுதி வளா்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் அய்யாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட உயா் கோபுரமின் விளக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, குத்துக்கல்வலசை ஊராட்சித் தலைவா் செ.சத்தியராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மா.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வல்லம் மு.ஷேக்அப்துல்லா உயா்கோபுர மின் விளக்கை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இயக்கிவைத்தாா்.
இதில், அய்யாபுரம் திமுக செயலா் செல்வகுமாா், குத்துக்கல்வலசை ஊராட்சி திமுக செயலா் காசி கிருஷ்ணன், ஊா் நாட்டாண்மை குருசாமி, நாகராஜ், மல்லிகா வேல்ராஜ் மற்றும் குத்துக்கல்வலசை ஊராட்சி உறுப்பினா்கள் சி.அம்புலி, சு.கண்ணன், சு.இசக்கி தேவி, அ.கலைச்செல்வி, சங்கரம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
குத்துக்கல்வலசை ஊராட்சி செயலா் நா.வெங்கடாசலம் நன்றி கூறினாா்.