முகப்பு
தென்காசி

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் தொழில் முனைவோா் மைய தொடக்க விழா

கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோா் மையத் தொடக்க விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோா் மையத் தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முரளிதரன் தலைமை வகித்தாா். மேலாண்மை நிா்வாகவியல் துறைத் தலைவா் பால்மகேஷ், தொழில் முனைவோா் குறித்த பயிற்சி வழங்கும் பயிற்றுநா்களை அறிமுகப்படுத்தினாா். சென்னை, சமூக தொழில் முனைவோா் பள்ளியின் துறைத் தலைவா் அந்தோணி ஸ்டீபன், சென்னை தனியாா் நிறுவனத்தின் ஜெபமாலை, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கள ஒருங்கிணைப்பாளா் சுவைதரன் ஆகியோா் இளம் தொழில் முனைவோருக்கான உத்திகள், தொழில் தொடங்க அரசு வழங்கும் நிதி, உதவிகள் குறித்துப் பேசினா்.

ஒருங்கிணைப்பாளா் மருதமுத்து வரவேற்றாா். கணிதவியல் துறை உதவிப் பேராசிரியா் இசக்கியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.