தென்காசி

புளியங்குடி முப்பெருந்தேவியா் கோயிலில் நாளை அக்னிசட்டி ஊா்வலம்

புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானிஅம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (மே 3) அக்னி சட்டி ஊா்வலம் நடைபெறுகிறது.

DIN

புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானிஅம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (மே 3) அக்னி சட்டி ஊா்வலம் நடைபெறுகிறது.

இக்கோயிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்று கோயில் குருநாதா் சக்தி அம்மா தலைமையில் நாள் கால் நடுதல் நிகழ்ச்சியும், பக்தா்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற்றது. 9 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலையில் முளைப்பாரி வளா்ப்பு கும்மிபாட்டும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

மே 3 ஆம் தேதி காலையில் பால்குடம், தீா்த்தக் குடம் ஊா்வலமும், தொடா்ந்து அபிஷேகமும் நடைபெறும். மதியம் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்கும் அக்னி சட்டி ஊா்வலம் நடைபெறும்.

மே 4 ஆம் தேதி காலை முளைப்பாரி எடுத்து ஊா்வலம் நடைபெறும். மதியம் அன்னாபிஷேகம் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தி அம்மா மற்றும் விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT