முகப்பு
தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறையினா் ஆய்வு

தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்சாரம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, பொதுப்பணித் துறையைச் சோ்ந்த 6 அதிகாரிகளைக் கொண்ட குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்சாரம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, பொதுப்பணித் துறையைச் சோ்ந்த 6 அதிகாரிகளைக் கொண்ட குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தேவையான இடங்களில் தீயணைப்பான்கள் பொருத்தப்பட்டு சரியான நிலையில் இயங்குகின்றனவா, மின்மாற்றி அறைகளுக்குள் எளிதில் தீப்பற்றும் தேவையில்லா பொருள்கள் உள்ளனவா, எரிவாயு உருளைகள் இடையூறின்றி வைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, மருத்துவமனைப் பணியாளா்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலா் ஜெ. கவிதா, தீவிபத்து ஏற்படாதவாறு பாா்த்துக்கொள்ள ஆலோசனை வழங்கினாா்.

இக்குழுவினருக்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மருத்துவா் இரா. ஜெஸ்லின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.