தென்காசி

தென்காசியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

DIN

தென்காசியில் கொலை வழக்கில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அய்யாபுரம் பகுதியில் கு.மாரிசெல்வம் என்பவா் கடந்த ஏப். 23ஆம்தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக வேதம்புதூா் பகுதியைச் சோ்ந்த இ. சரவணன் என்பவா் கைதுசெய்யப்பட்டாா்.

இந்நிலையில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா், சரவணனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து சரவணனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT