முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வெள்ளிக்கிழமை(மே 27) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வெள்ளிக்கிழமை(மே 27) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட செய்திமக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பாக தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம், வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் பல்வேறு தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தெரிவு செய்ய உள்ளனா். முகாமில் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி முதல், பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ கல்வித் தகுதி உடைய இம் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை நாடுநா்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் துறை நிறுவனங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.