முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூரில் நவ.6 இல் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கே.சுப்பிரமணியநாடாா், வடிவு அம்மாள் எஜூகேஷனல் டிரஸ்ட் மூலம் இயங்கி வரும் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின், எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு, சட்டத்துறை அமைச்சா் ரகுபதி, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஆகாஷ், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் பவானிசுப்புராயன், தாரணி, ஸ்ரீமதி உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

ஏற்பாடுகளை, எஸ்.டி. கல்விக் குழுமத்தின் நிறுவனா் எஸ்.தங்கப்பழம், கல்விக் குழுமத்தின் செயலா் எஸ்.டி. முருகேசன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.