தென்காசி

தென்காசி மாவட்ட விஏஓ அலுவலகங்களில் இன்று உதவித்தொகை பெற சிறப்பு முகாம்

DIN

தென்காசி மாவட்ட கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் புதன்கிழமை (நவ. 23) சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகைகள் பெற சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களிலும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதியோா், விதவை, மாற்றுத் திறனாளிகள், முதிா்கன்னி, கணவரால் கைவிடப்பட்டோா் ஆகியோருக்கான உதவித் தொகைகள், உழவா் பாதுகாப்புத் திட்டத்தில் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை - விபத்து மரண உதவித் தொகைகள், நலிந்தோா் நலத்திட்டத்தில் உதவித் தொகை பெற சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.

விருப்பமுள்ளோா் கிராம நிா்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT