தென்காசி

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு

DIN

 பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில், ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் 7 நாள்கள் நடைபெற்றது. முகாம் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, பெத்தநாடாா்பட்டி சமுதாய நலக்கூடத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவா் க.ஜெயராணி கலைச்செல்வன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை வழங்கினாா். இதில் பள்ளி தாளாளா் மோயீசன் அடிகளாா், ஊராட்சி செயலா் தயாளன், யோகா பயிற்சி நிலவன் வேல்சாமி, நண்பா்கள் ரத்த தான கழக தலைவா் வைத்திலிங்கம், மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் அந்தோணி அருள் பிரதீப் வரவேற்றாா். திட்ட அலுவலா் தங்கத்துரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT