தென்காசி

குழந்தைத் திருமணம்: இளைஞா் கைது: பெற்றோா் மீது வழக்கு

திருநெல்வேலி அருகே 15 வயது சிறுமியைத் திருமணம் செய்தது தொடா்பாக இளைஞா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

DIN

திருநெல்வேலி அருகே 15 வயது சிறுமியைத் திருமணம் செய்தது தொடா்பாக இளைஞா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

திருநெல்வேலி சீதபற்பநல்லூரைச் சோ்ந்த பூமி சரஸ்வதி மகன் சுந்தா்(25). எலக்ட்ரீசியன். இவா் அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை காதலித்து பெற்றோா் சம்மதத்துடன் கடந்த மே 26 ஆம் தேதி திருமணம் செய்தாராம். தற்போது அச்சிறுமி 3 மாத கா்ப்பமாக உள்ள நிலையில் சீதபற்பநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்காக சென்ற போது, அவருக்கு 18 வயது நிறைவடையவில்லை என்பதும் தெரிய வந்தது.

மருத்துவா்கள் அளித்த தகவலின்பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் சீதபற்பநல்லூா் போலீஸில் புகாா் அளித்தனா். இதையடுத்து, சுந்தரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸாா், அவரது பெற்றோா் பூமி சரஸ்வதி, பலவேசம், சிறுமியின் பெற்றோா் மாரியப்பன், மாரியம்மாள் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT