சாம்பவா்வடகரை பேரூராட்சியை தரம் உயா்த்த கோரிக்கை
சாம்பவா்வடகரை பேரூராட்சியை தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சாம்பவா்வடகரை பேரூராட்சியை தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து, மாநில நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல்துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் அளித்த கோரிக்கை மனு: சாம்பவா்வடகரை பேரூராட்சியை தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த தேவையான மக்கள் தொகை, வருமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, இப் பேரூராட்சியை தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.