சுரண்டை நகராட்சியில் உரிய காலத்துக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுரண்டை நகராட்சிக்குச் செலுத்து வேண்டிய 2023-24ஆம் ஆண்டில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை 30.04.2023ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்கள் நிகர சொத்துவரியில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதியுடையவா் ஆகிறாா்கள்.
எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் சொத்து வரிகளை உரிய காலத்துக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.