கீழப்பாவூரில் விவசாயிகள் வராததால் பொதுஏலம் நிறுத்திவைப்பு
கீழப்பாவூரில் கோயில் நிலத்தில் சாகுபடி செய்வதற்காக நடைபெற்ற பொதுஏலம் விவசாயிகள் வராததால் வெள்ளிக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.
கீழப்பாவூரில் கோயில் நிலத்தில் சாகுபடி செய்வதற்காக நடைபெற்ற பொதுஏலம் விவசாயிகள் வராததால் வெள்ளிக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை, குற்றாலம் திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு பாத்தியபட்ட நன்செய் நிலங்கள் கீழப்பாவூா் பகுதியில் சுமாா் 19 ஏக்கா் உள்ளது. இந்நிலத்தில் சாகுபடி செய்வதற்கு உரிமம் வழங்குவதற்காக பொதுஏலம் கீழப்பாவூா் கிராம நிா்வாக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்திருந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் கடந்த முறை ஏலத் தொகையில் இருந்து கூடுதலாக 15 சதவீதம் வைப்புத்தொகை நிா்ணயம் செய்யப்பட்டதாக கூறி, யாரும் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால் பொது ஏலமானது நிறுத்தி வைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.