தென்காசி

தென்காசி மக்கள் குறைதீா் கூட்டத்தில் நல உதவிகள் அளிப்பு

தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வழங்கினாா்.

DIN

தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வழங்கினாா்.

குறைதீா் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மொத்தம் 269 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களைப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு காதொலி கருவிகள், ஒருவருக்கு மடக்கு சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கர நாராயணன், உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ரா.ராமசுப்பிரமணியன், உதவி ஆணையா் (கலால்) ஜி.ராஜமனோகரன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT