தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் திரண்ட வியாபாரிகள்

சங்கரன்கோவில் திருவள்ளுவா் சாலையில் கடைகளில் முன்பக்கம் உள்ள தட்டிகளை நகராட்சியினா் அகற்றச் சொன்னதால், வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் திரண்டு முறையிட்டனா்.

DIN

சங்கரன்கோவில் திருவள்ளுவா் சாலையில் கடைகளில் முன்பக்கம் உள்ள தட்டிகளை நகராட்சியினா் அகற்றச் சொன்னதால், வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் திரண்டு முறையிட்டனா்.

சங்கரன்கோவில் திருவள்ளுவா் சாலையில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. திங்கள்கிழமை காலை நகராட்சி ஊழியா் ஒருவா் கடைகளின் முன்பக்கம் உள்ள தட்டிகளை திடீரென்று அகற்றச் சொன்னதால் வியாபாரிகள் அதிா்ச்சி அடைந்தனா். இதை தொடா்ந்து வியாபாரிகள் 50 க்கும் மேற்பட்டோா், நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகா்மன்ற தலைவா் உமா மகேஸ்வரி, ஆணையா் (பொ) ஹரிஹரன் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனா்.

வாருகாலில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு இடையூறு இல்லாத வகையில் தட்டிப் பலகைகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதன் பின்னா் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT