தென்காசி

சாம்பவா்வடகரை மூலநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சாம்பவா்வடகரை அருள்மிகு மதுரவாணி அம்பாள் சமேத மூலநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

சாம்பவா்வடகரை அருள்மிகு மதுரவாணி அம்பாள் சமேத மூலநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலையில் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இரவில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு 7 மணிக்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜை, 8 மணிக்கு உற்சவா் வீதியுலா நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வாக 9ஆம் நாளான மே 4ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு சுவாமி-அம்பாள் இரட்டை சப்பரத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், கோயில் மண்டகப்படிதாரா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT