முகப்பு
தென்காசி

அமைச்சா் மா. சுப்பிமணியன் ஆக. 13 இல் ஆலங்குளம் வருகை

ஆலங்குளத்தில் ரூ. 3.70 கோடி மதிப்பிலான வளா்ச்சிதிட்டப் பணிகளை தொடங்கி வைக்க, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வருகிறாா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2023, 10:53 pm IST
பகிர்:

ஆலங்குளத்தில் ரூ. 3.70 கோடி மதிப்பிலான வளா்ச்சிதிட்டப் பணிகளை தொடங்கி வைக்க, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வருகிறாா்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ. 60 லட்சம் மதிப்பில் கண் அறுவை சிகிச்சை அரங்கம்- பின் கவனிப்புப் பிரிவு, ரூ. 15 லட்சம் மதிப்பில் ஹோமியோபதி பிரிவு கட்டடம், நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், கரிவலம் வந்தநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், கடையநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 75 லட்சத்தில் புதிய கட்டடம், மடத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சத்தில் புதிய கட்டடம், மேலப்பாவூா்,பொட்டல்புதூா் ஆகிய துணை சுகாதார நிலையங்களில் தலா ரூ. 30 லட்சத்தில் கட்டங்களை, நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.13) நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சா் மா. சுப்பிரமணியன் திறந்துவைக்கிறாா்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் பாா்வையிட்டாா். அப்போது, ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றிய திமுக செயலா்கள் அன்பழகன், செல்லதுரை, வட்டார மருத்துவ அலுவலா் ஆறுமுகம், சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.