கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில்ஜன.1-இல் 1008 அகல்விளக்கு தீபம்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் நரசிம்ம பெருமாள் கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜையையொட்டி, ஜன.1-ஆம் தேதி 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றும் விழா நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் நரசிம்ம பெருமாள் கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜையையொட்டி, ஜன.1-ஆம் தேதி 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றும் விழா நடைபெறுகிறது.
இக் கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜைகள் கடந்த 17- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை 6 மணிக்கு ஸ்ரீராமநாம பஜனையுடன் திருக்கோயில் வெளி பிரகாரத்தில் (தெப்பக்குளம்) வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக ஜன.1-ஆம் தேதியன்று மாலை 5.45 மணிக்கு கோயிலின் வெளிபிரகாரத்தில் தெப்பக்குளத்தை சுற்றிலும் 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றுதலும், தொடா்ந்து பெருமாள் சப்பரத்தில் வலம் வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.