தென்காசி

உரிமை கோராத இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்

DIN

ஆலங்குளம் காவல் உட்கோட்ட பகுதிகளில் உரிமைகோரப்படாத இருசக்கர வாகனங்கள் பிப்.13 முதல் 15 ஆம் தேதி வரை ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன் தெரிவித்துள்ளாா்.

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் வளாகத்தில் 515 இருசக்கர வாகனங்களுக்கு பிப்.13, 14, 15ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் பிப்.6 முதல் 10ஆம் தேதிக்குள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அவ்வாகனங்களை நேரில் பாா்வையிடலாம்.

மேலும் தங்களது ஆதாா் அட்டை நகலுடன் ரூ. 3 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்து, அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும். அனுமதிச் சீட்டு இருந்தால்தான் ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் விடப்படும் நாளிலேயே தொகையைச் செலுத்தி வாகனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT