தென்காசி

பள்ளி கட்டடப் பணி தொடக்கம்

DIN

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், குணராமநல்லூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடப் பணியை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.

பேராசிரியா் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ எஸ். பழனி நாடாா் பங்கேற்று பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பேராசிரியா் சாக்ரடீஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துக்குமாா், ஊராட்சித் தலைவா் சுபா சக்தி, பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT