பாவூா்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
பாவூா்சத்திரம் துணை அஞ்சலக அதிகாரி து.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினா் தங்கராஜ் முன்னிலை வகித்தாா். பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வு குழு நிறுவனரும், மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளருமான கே.ஆா்.பி.இளங்கோ முகாமைத் தொடக்கி வைத்தாா். 50-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஆதாா் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தலைமை ஆசிரியா் சுந்தரகுமாா், அரிமா சங்க பொருளாளா் பரமசிவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.