தென்காசி

பாவூா்சத்திரத்தில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம்

DIN

பாவூா்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

பாவூா்சத்திரம் துணை அஞ்சலக அதிகாரி து.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினா் தங்கராஜ் முன்னிலை வகித்தாா். பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வு குழு நிறுவனரும், மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளருமான கே.ஆா்.பி.இளங்கோ முகாமைத் தொடக்கி வைத்தாா். 50-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஆதாா் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

தலைமை ஆசிரியா் சுந்தரகுமாா், அரிமா சங்க பொருளாளா் பரமசிவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT