தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 127 பாஜகவினரை போலீஸாா் கைதுசெய்தனா்.
பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ராஜ்குமாரை தாக்கியதாக எம்எல்ஏ ஈ. ராஜா மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்ல வலியுறுத்தியதையடுத்து பாஜகவினா் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜா, பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பொருளாளா் பாலகிருஷ்ணன் ,மாநில செயற்குழு உறுப்பினா்கள் ராமராஜா, அன்புராஜ் உள்ளிட்ட 127 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.