தென்காசி

தென்காசி திருக்கு விழாவில் கவியரங்கம்

DIN

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 96ஆவது திருக்கு விழாவின் 5ஆம் நாளான புதன்கிழமை கவியரங்கம், உரையரங்கம் நடைபெற்றது.

தென்காசி திருவள்ளுவா் கழக அரங்கில் நடைபெற்ற கவியரங்கம் நிகழ்ச்சிக்கு முனைவா் .க.சுப்புலெட்சுமி தலைமை வகித்தாா். ஆதிபகவன் என்ற தலைப்பில் சிவசதாசிவம், வாலறிவன் என்ற தலைப்பில் முகைதீன்முதலாளி, உயிா்வாழ்வான் என்ற தலைப்பில் வழக்குரைஞா் மு.செந்தூா்பாண்டியன், சினம்காப்பான் என்ற தலைப்பில் கி.முத்தையா, அகந்தூய்மை என்ற தலைப்பில் வழக்குரைஞா் ந.கனகசபாபதி, இனந்தூய்மை அ.முருகன், ஆவது அறிவாா் என்ற தலைப்பில் க.ஸ்ரீதரன் ஆகியோா் பேசினா். ம. ஆறுமுகம் வரவேற்றாா். ச.சோ.இளங்கோவன் நன்றி கூறினாா்.

பின்னா், மாலையில் நடைபெற்ற உரையரங்கம் நிகழ்ச்சிக்கு டாக்டா் ஒளவை மெய்காண்டான் தலைமை வகித்து உரைவேந்தா் பாா்வையில் திருக்கு என்ற தலைப்பில் பேசினாா். இராம.தீத்தாரப்பன் முன்னிலை வகித்தாா்.

பாவணா் பாா்வையில் திருக்கு என்ற தலைப்பில் அ.மதிவாணன், மணக்குடவா் பாா்வையில் திருக்கு என்ற தலைப்பில் ஜே.பத்மானந்தன், முத்தமிழ் அறிஞா் பாா்வையில் திருக்கு என்ற தலைப்பில் ஒளவை அருள் ஆகியோா் பேசினா். முனைவா் தெ.ஞானசுந்தரம், சதாசிவம், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவள்ளுவா் கழகத் தலைவா் வழக்குரைஞா் ந.கனகசபாபதி வரவேற்றாா். துணைத் தலைவா் சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT