தென்காசி

கடையநல்லூரில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை

கடையநல்லூா் நகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான்.

DIN

கடையநல்லூா் நகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான்.

கடையநல்லூா் நகா்மன்றக் கூட்டம், தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ராஜையா, பொறியாளா் ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகரின் சில பகுதிகளுக்கு 2 நாள்களுக்கு ஒரு முறை, சில பகுதிகளுக்கு 7 நாள்கள் ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் சீரான விநியோகம் செய்ய வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினா்கள் சங்கரநாராயணன், சந்திரா, சுபா, பூங்கோதை ஆகியோா் வலியுறுத்தினா்.

நகா்மன்றத் தலைவா் பதிலளிக்கையில், நகராட்சி கிணறுகளிலும் தண்ணீா் குறைந்துள்ளது. இருப்பினும், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீா் சீராக வழங்கப்படுகிறது. இன்னும் 15 நாள்களில் அனைத்துப் பகுதிகளுக்கும் 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

நகராட்சி தொழில்நுட்ப பிரிவு மற்றும் பொறியியல் பிரிவு பணியாளா்களுக்கு ரூ.3.50 லட்சத்தில் கூடுதல் அறை அமைக்க சில உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் அத்தீா்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.

வெளிநடப்பு: இதனிடையே, அதிமுக உறுப்பினா் பூங்கோதை பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதிமுக, பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT