முகப்பு
தென்காசி

அம்மையாபுரத்தில் என்.எஸ்.எஸ். முகாம்

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் அம்மையாபுரத்தில் நடைபெறுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் அம்மையாபுரத்தில் நடைபெறுகிறது.

முகாம் தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு குலையநேரி ஊராட்சி மன்றத் தலைவா் சீதா பாலமுருகன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அருள் முகிலன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரா.சின்னத்தாய், முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

முகாம் நாள்களில் பகல் நேரங்களில் களப்பணியும், மாலையில் பல்வேறு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளையும் மாணவா்கள் நடத்துகின்றனா்.

நிகழ்ச்சியில் ஆனைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் தங்கராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் முருகேஸ்வரி, துரைராஜ், கல்லூரி பேராசிரியா்கள் மதியழகன், புஷ்பா, மகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.