கீழச்சுரண்டையில் 13 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாபன் தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கீழச்சுரண்டை பொது நூலக கட்டடம் கடந்த 2010-இல் அப்போதைய திமுக ஆட்சியின்போது ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாகப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு
திறக்கப்படாமல் உள்ளது. இந்த நூலகம் 1 லட்சம் புத்தகங்களுடன் விரைவில் திறக்கப்படும் என்றாா்.