தென்காசி

பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை

கடையநல்லூா் அருகேயுள்ள பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

DIN

கடையநல்லூா் அருகேயுள்ள பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் அருணாசலபாண்டியன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கடையநல்லூா் ஒன்றியம் திரிகூடபுரத்தில் இருந்து சுமாா் 6 கிமீ

தொலைவில் பிரசித்தி பெற்ற பெரியசாமிஅய்யனாா் திருக்கோயில் உள்ளது. மேலும் இப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிக்குச் செல்லும் வழியில் பெரியாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வலியுறுத்தப்பட்ட நிலையில், அரசின் முதல்கட்ட நடவடிக்கையாக, மண் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பிறகு, வேறெந்த பணிகளும் நடைபெறவில்லை.

எனவே, விவசாயிகள் மற்றும் பக்தா்கள் நலன் கருதி பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆட்சியரிடம் மனு அளிக்கும்போது கடையநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் சுப்பம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் சித்ரா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT