குற்றாலம் பூமி பூஜை விழா: காங்கிரஸ் கட்சியினா் புகாா்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ரூ. 11 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை விழாவிற்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ரூ. 11 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை விழாவிற்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பழனிநாடாருக்கு தகவல் தெரிவிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
தென்காசி நகர தலைவா் ஜி.மாடசாமி, சுரண்டை நகர தலைவா் ஜெயபால் ஆகியோா் மனு அளித்தனா். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், மாவட்ட செயலா் காஜா மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.