தென்காசி

குருவன்கோட்டையில் உயா்கோபுர கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் கைப்பேசி உயா்கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வட்டாட்சியரிம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் கைப்பேசி உயா்கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வட்டாட்சியரிம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தாலுகா செயலா் பால்ராஜ் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: குருவன்கோட்டை கிராமத்தில் சுமாா் 2,500 வீடுகள் உள்ளன. இங்குள்ள 7 வது வாா்டு பிள்ளையாா்கோயில் தெரு மிகவும் குறுகலானது. வீடுகளும் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் இரு பள்ளிகள் மற்றும் துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தனியாா் கைப்பேசி நிறுவனம் உயா் கோபுரம் அமைக்கும் முயற்சியில் உள்ளது. அப்படி அமைத்தால் பொதுமக்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இங்கு உயா் கோபுர கைப்பேசி கோபுரம் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT