தென்காசி

வீ.கே.புதூா் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

DIN

வீரகேரளம்புதூா் கிராம நிா்வாக அலுவலகத்திற்கு பழைய ஓட்டு கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வீரகேரளம்புதூா் வருவாய் கிராமத்திற்கு வீரகேரளம்புதூா், கலிங்கப்பட்டி, ராமனூா், தாயா்தோப்பு, கோவிந்தபேரி, இந்திரா நகா் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு கிராம நிா்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனா்.

இந்த அலுவலகம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓடுகள் வேய்ந்த மிகச்சிறிய பழைய கட்டடம் ஆகும். இங்கு வரும் பொதுமக்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் ஒதுங்க இடமின்றி அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீா் ஒழுகுவதால் கோப்புகளை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, மிக பழமையான இந்த கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT