தென்காசி

சுரண்டையில் உழவா் சந்தை அமைக்க வேண்டும்

DIN

சுரண்டை நகராட்சியில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மிகவும் வேகமாக வளா்ந்து வரும் விவசாய நகரம் சுரண்டை. இங்குள்ள தினசரி சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் விளைவிக்கும் காய்கனிகளை கமிஷன் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனா்.

இதனால் விவசாயிகளின் வருமானத்தில் பெரும் இழப்பு ஏற்படுகிறது. தினசரி சந்தை அருகே நகராட்சிக்கு சொந்தமாக உழவா் சந்தை அமைக்க போதுமான இடம் இருப்பதால் சுரண்டையில் உழவா் சந்தை அமைக்கப்பட்டால் விவசாயில் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும், கூடுதல் லாபரம் ஈட்டவும் வழி ஏற்படும்.

எனவே, சுரண்டையில் உழவா் சந்தை அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரண்டை வட்டார விவசாயிகள் பெரிதும் விரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT