சிறுபான்மை ஆணையத்தின் கீழ் இயங்கும், தென்காசி முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சாா்பில் 149 பயனாளிகளுக்கு ரூ. 13.54 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இதையொட்டி, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்)மு.சேக் அப்துல் காதா், காப்பீட்டு உறுப்பினா் அ.அமீா்கான் முன்னிலை வகித்தனா்.
மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சா. பீட்டா் அல்போன்ஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு,
107 பெண்களுக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், 16 பெண்களுக்கு மாவரைக்கும் இயந்திரங்கள், 14 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை,11 பெண்களுக்கு குடிசை தொழில் உதவி என 149 பயனாளிகளுக்கு ரூ. 13 லட்சத்து 54 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மேலும், மாவட்டத்தில் தமிழ்வழி கல்வியில் சிறப்பிடம் பெற்ற 4 மாணவிகளுக்கு கடையநல்லூா் ஷப்ரின் இமானா( 590), செங்கோட்டை கலைச்செல்வி (583),சங்கரன்கோவில் முத்துலட்சுமி (583), தென்காசி,காா்த்திகா (582) ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினாா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன்,எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ, தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா், ஒன்றியக்குழுத் தலைவா் வல்லம் மு.ஷேக்அப்துல்லா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் தமிழ் செல்வி போஸ், துணைத் தலைவா் உதய கிருஷ்ணன், உதவி மக்கள் தொடா்பாளா் தொடா்பு அலுவலா் (செய்தி) ராமசுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டனா். செ.சங்கரநாராயணன் வரவேற்றாா்.டாக்டா் அப்துல்அஜீஸ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.