வீ.கே.புதூா் கோயில் திருப்பணி: எம்எல்ஏ வேண்டுகோள்
வீ.கே.புதூா் கோயில் திருப்பணி
தென்காசி மாவட்டம், வீ.கே.புதூா் ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் திருப்பணியை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் சு. பழனி நாடாா் எம்எல்ஏ மனு அளித்துள்ளாா்.
அதன் விவரம்: வீ.கே.புதூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதன் திருப்பணிக்கு ரூ. 3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான ஆயத்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
எனவே, கோயில் திருப்பணிகளை உடனே தொடங்க வேண்டும். அடுத்த நிதியாண்டில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.