முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

பாவூா்சத்திரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் சேகரகுரு டேனியல் தனசன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளாா் இறை செய்தி வழங்கினாா். இதில், ஏராளமான கலந்துகொண்டனா்.

பாவூா்சத்திரம் மேற்கு சபை, கேடிசி நகா், கல்லூரணி, மடத்தூா், திப்பணம்பட்டி, நாட்டாா்பட்டி, நாகல்குளம், குறும்பலாப்பேரி, திருவடிதாசபுரம், குலசேகரப்பட்டி, கீழப்பாவூா், இடையா்தவணை, சியோன்நகா், கருமடையூா், பஞ்சபாண்டியூரில் உள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →