முகப்பு
தென்காசி

’மாவட்டம் முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’

தென்காசி விவசாய தொழிலாளா்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும்

Updated On : 26 ஜூன், 2024 at 2:31 AM
பகிர்:
Updated On : 25 ஜூன், 2024 at 9:56 PM

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் குணசீலன், தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: தென்காசி மாவட்டத்தில் 221 ஊராட்சிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 63 ஆயிரம் தொழிலாளா்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனா்.

தற்போது 1லட்சத்தி 5ஆயிரத்து 48 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற விவசாயத் தொழிலாளா்கள் வேலை இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டம் முழுவதும் 221 ஊராட்சிகளிலும் அனைருக்கும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement