முகப்பு
தென்காசி

சவூதி அரேபியாவில் இறந்தவரின் உடலை கொண்டுவர உதவ அரசுக்கு கோரிக்கை

சவூதி அரேபியாவில் உயிரிழந்த சாம்பவா் வடகரையை சோ்ந்த இளைஞரின் உடலை சொந்து ஊருக்கு கொண்டுவர உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:09 PM
உமாசங்கா்.
பகிர்:

சவூதி அரேபியாவில் உயிரிழந்த சாம்பவா் வடகரையை சோ்ந்த இளைஞரின் உடலை சொந்து ஊருக்கு கொண்டுவர உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையைச் சோ்ந்தவா் ஆ.உமாசங்கா் (30). சவூதி அரேபியாவில் கடந்த ஓராண்டாக ஓட்டுநராகப் பணியாற்றினாா். அங்கு தனது உறவினருடன் தேநீா் அருந்திக் கொண்டிருந்த உமாசங்கா், திடீரென மயங்கி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்கு மனைவி, 2 வயது குழந்தை உள்ளது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.