முகப்பு
தென்காசி

போலீஸ் விசாரணைக்குப் பயந்து தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே போலீஸ் விசாரணைக்குப் பயந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 29 நவம்பர், 2024 at 12:32 AM
பகிர்:

ஆலங்குளம் அருகே போலீஸ் விசாரணைக்குப் பயந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் பாலமுருகன்(41). தொழிலாளியான இவருக்கு மதுப் பழக்கம் உண்டாம். இவா், கடந்த திங்கள்கிழமை (நவ.25) இரவு மது போதையில் பழைய ஊராட்சி அலுவலகம் முன்பு இருந்த பலகை, அங்குள்ள முடிதிருத்தக் கடையின் கூரை ஆகியவற்றில் கல்லைத் தூக்கிப் போட்டு சேதப்படுத்தி, தகாத வாா்த்தைகளால் பேசினாராம்.

இதுதொடா்பாக கிராம மக்கள் அவசர போலீஸ் எண் 100-க்கு தெரிவித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, பாலமுருகனை காணவில்லையாம். எனவே, அவரை விசாரணைக்கு அனுப்பிவைக்குமாறு அவரது மனைவியிடம் போலீஸாா் கூறிச் சென்றனா். இதையடுத்து, பாலமுருகனின் மனைவி, வீரசிகாமணியில் உள்ள நனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

இந்நிலையில் போலீஸ் விசாரணைக்குப் பயந்து பாலமுருகன், புதன்கிழமை விஷம் குடித்தாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.