முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் அருகே மனுநீதி நாள் முகாமில் ரூ. 24 லட்சம் நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள நகரம், ராமசாமியாபுரத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:46 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள நகரம், ராமசாமியாபுரத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா். ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, 67 பேருக்குக்கு ரூ. 24 லட்சத்து 91 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசும்போது, ஏதேனும் குறைகள் இருந்தால் 77900 19008 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் ஆட்சியருக்கு புகாா் மனுக்கள் அளிக்கலாம். தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்படும் என்றாா்.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், தென்காசி வருவாய்க் கோட்டாட்சியா் லாவண்யா, கடையநல்லூா் வட்டாட்சியா் பொ. பாலசுப்பிரமணியன், வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையாபாண்டியன், துணைத் தலைவா் மோகன், ஊராட்சித் தலைவா்கள் அமுதா ரமணிபாய், அந்தோணியம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.